நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கா. சென்னுகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நரசிங்கபுரம் நகராட்சிக்கு மேட்டூர்-ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் பிரதான குழாய் சேலம் அம்மாப்பேட்டை சாமி பள்ளி அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந் நகராட்சி பகுதிகளில் ஏப். 16, 17 ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் சேர்த்து வைத்துள்ள காவிரி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளார்.