மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 


ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கம்பம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் அம்மன், வெள்ளி முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி இரவு சக்தி அழைத்தலும், மே 1-ஆம் தேதி பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், ஆடு, கோழி பலியிடுதல், மாலை அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், உருளுதண்டம் போடுதலும், மே 2-ஆம் தேதி வண்டி வேடிக்கை, வாண வேடிக்கையும், மே 3-ஆம் தேதி சத்தாபரணமும் நடை
பெறுகிறது. 
இந்த திருவிழாவில் காமலாபுரம் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com