ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுக்கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மதுக்கடையில் குடிமக்கள் மது வாங்க வருவதால் அப் பகுதியில் தினம்தோறும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டைகள் நடைபெறுவதால் குடும்பப் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப் பகுதி மதுக்கடையை கிராமத்திலிருந்து அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.