ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், காவேரிபீக் சாலையில் பாறைகள் சரிவு ஏற்பட்டு வருகிறது.
ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை ,பனி மூட்டம் ஏற்பட்டு வருவதையடுத்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கிராம சாலையில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அவ்வப்போது சாலையை சீரமைத்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் சென்று வருகின்றன.