ஏற்காட்டில் தொடர்மழையால் நடப்பாண்டு மிளகு செடிகளில் மிளகு காய்ப்பிடிப்பு அதிகரித்துள்ளது.
ஏற்காடு, செங்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு, கீரைக்காடு, புத்தூர், மஞ்சக்குட்டை, அசம்பூர், பிலியூர் மாரமங்கலம், தலைச்சோலை, வெள்ளக்கடை காவேரிபீக், செம்மநத்தம், நாகலூர், முளுவி கரடியூர், பட்டிப்பாடி வேலூர் கிராமங்களில் காபி செடிகளுக்கு நடுவில் ஊடுபயிராக சவுக்கு மரங்களில் மிளகு செடிகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்தாண்டு ஒரு கிலோ மிளகு ரூ.350 முதல் ரூ.400 வரை இருந்த நிலையில், நடப்பாண்டு கூடுதல் விளைச்சலால், விலை கிடைக்கும் என காபி விவசாயிகள் எதிர் நோக்கியுள்ளனர்.