அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.

ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.
 ஆத்தூரை அடுத்துள்ள ஒட்டம்பாறை தேசிய நெடுஞ்சாலையில் அண்மையில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
 இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை அப்பகுதி மக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். ஆத்தூர் காவல் ஆய்வாளர் கே. முருகேசன் வழக்குப் பதிவு செய்து முதியவரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com