இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் பலி

கொத்தாம்பாடி  அருகே  இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில்  ஒருவர் உயிரிழந்தார். 

கொத்தாம்பாடி  அருகே  இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில்  ஒருவர் உயிரிழந்தார். 

ஆத்தூர்  கொத்தாம்பாடி  அடுத்துள்ள சிவகங்கைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). விவசாயி. இவரும், இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பூமாலை மகன் சின்னத்தம்பி  என்பவரும் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆத்தூரை நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர். அப்போது பவானியில்  இருந்து தனபால் (65) என்பவர் தனது மனைவி மங்கையர்க்கரசியுடன்  ஆறகளூர் காயநிர்மலேஸ்வரர் கோயிலுக்கு காரில்  சென்று கொண்டிருந்தார்.
கொத்தாம்பாடி  தனியார் பள்ளி அருகே எதிர்பாராத விதமாக  தனபாலின் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னத்தம்பி,  காரில் வந்த தனபால்,  மங்கையர்க்கரசி ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 விபத்து குறித்து தகவல் அறிந்த  ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் கே.முருகேசன்,  சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com