தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறுசேமிப்பு கணக்குகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தம்மம்பட்டி இந்தியன் வங்கிக் கிளை அலுவலர்கள், மாணவ, மாணவியருக்கு சிறு சேமிப்பின் அவசியம் குறித்தும், நடைமுறைகள்,அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளியிலேயே சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையொட்டி மரக் கன்றுகள் நடப்பட்டன.