முன்னாள் மத்திய அமைச்சர் பி.ரங்கராஜன் குமாரமங்கலத்தின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
சேலம் அம்மாப்பேட்டை சவுண்டம்மன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உருவப் படத்துக்கு மாநில பொதுக் குழு உறுப்பினர் கருப்பூர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர மாவட்ட துணைத் தலைவர் மெடிக்கல் பிரபு, தர்மலிங்கம், மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் வெங்கடேஷ், கௌதம், கார்த்திக், சண்முகம், ஜெயபிரகாஷ், ஜீவானந்தம், வெங்கட்ராமன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சௌந்தரராஜன், டி.கே.டி.மேகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.