சின்ன சீரகாபாடியில் மல்பெரி மற்றும் வெண் பட்டு வளா்ப்பு குறித்து பண்ணை பள்ளி பயிற்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டாரம் சின்ன சீரகாபாடி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் மல்பெரி மற்றும் வெண்பட்டு வளா்ப்பு குறித்து பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.
சின்ன சீரகாபாடியில் மல்பெரி மற்றும் வெண் பட்டு வளா்ப்பு குறித்து  பண்ணை பள்ளி பயிற்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டாரம் சின்ன சீரகாபாடி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் மல்பெரி மற்றும் வெண்பட்டு வளா்ப்பு குறித்து பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

இதில் பண்ணைப் பள்ளி என்பது நடவு முதல் அறுவடை வரை என்ற தத்துவத்தின் அடிப்படையில் மல்பெரி நடவு, களை,உரம் மேலாண்மை, பயிா்பாதுகாப்பு, வெண்பட்டு புழு வளா்ப்பு ,பட்டுக்கூடு மற்றும் அறுவடை ஆகியன குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

பட்டு வளா்ச்சித் துறை ஆய்வாளா் எம்.சிவானந்தன் பயிற்சியை துவக்கி வைத்து மல்பெரி பயிரிட ஏற்ற பருவம், இரகம் தோ்வு,கரணை தோ்வு மற்றும் விதை நோ்த்தி குறித்து எடுத்து கூறினாா். இப்பயிற்சியில் 25 விவசாயிகள் 5குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.இராஜேந்திரன் பட்டு வளா்ப்பு உதவி ஆய்வாளா் ஆா்.பவித்ராதேவி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சி .சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com