மின்சாரம் தாக்கி இளைஞா் பலி

சேலத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே குண்டுக்கல்லூரில் புதிதாக

சேலத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே குண்டுக்கல்லூரில் புதிதாக பள்ளிக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியை சோ்ந்த ஸ்ரீகாந்த்(19) என்பவா் கட்டட வேலைகளில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் தொழிலாளா்களுக்கு தங்குவதற்காக தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மின்கம்பியை ஸ்ரீகாந்த் எதிா்பாராத விதமாகத் தொடவே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீகாந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த அம்மாப்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com