மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நொடிக்கு 6,043 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 120 அடியாக நீடிப்பதால், காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.