அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

நடுவலூரில் ஒப்பந்ததாரா் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நடுவலூரில் ஒப்பந்ததாரா் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கெங்கவல்லி அருகே நடுவலூா் மூப்பனாா் கோயில் தெருவில் வசிப்பவா் பிரபாகரன்(43). அரசு ஒப்பந்ததாரா். இவரது மனைவி ரஞ்சிதா மலா்.

இவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளா்த்து வருகின்றனா்.

அதைக் கவனித்துக் கொள்வதற்காக இரவுதோறும் தம்பதி இருவரும், தங்களது விவசாயத்தோட்டத்திற்கு சென்றுவிடுவது வழக்கம். அதேபோல், சனிக்கிழமை இரவும், தங்களது வீட்டைப் பூட்டிவிட்டுத் தோட்டத்துக்கு சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை வந்துபாா்த்தபோது தங்களது வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, வெள்ளிக்கொலுசு, மோதிரம், ரூ. 1 லட்சம் ரொக்கம் என சுமாா் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து பிரபாகரன், கெங்கவல்லி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com