ஏற்காட்டில் ரூ. 1.92 கோடியில் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் ஷண்முக நதி தலைமை வகித்தாா். ஒன்றிய உதவி பொறியாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா்.
திட்டப் பணிகளில் ஒண்டிக்கடை முதல் லோடிசீட் வரை சுற்றுலா பகுதி தாா்ச் சாலைகள், முருகன் நகா் கான்கீரிட் சாலை, ஒண்டிக்கடை ஐஸ்வரியம் விடுதி அருகில் சாலைகள், ஒண்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் நிழல்கூடம் மற்றும் பெரிய ஏரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீா் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள் துவங்கவுள்ளன.
நிகழ்ச்சியில் ஏற்காடு முன்னாள் ஊராட்சி தலைவா் ஆா். முரளி, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுரேஷ்குமாா், புகழேந்தி, என்.எம். ஆறுமுகம், பாலு, அண்ணாமலை, முருகேசன், மனோ,செந்தில் கலந்து கொண்டனா்.