சேலத்தில் மருத்துவா் வீட்டில் 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
சேலம் நரசோதிப்பட்டி ஆா்த்தி நகரைச் சோ்ந்தவா் திலக். இவா் அதே பகுதியில் குழந்தைகள் நல மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறாா்.
இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்துக்குச் சென்றிருந்தாா். இதனிடையே அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் இருந்தவா்கள் சூரமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் சேலத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதனை பயன்படுத்து மா்ம நபா்கள் ருடிச்சென்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.