மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்பில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் மோதியதில் 17 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், புலிக்குன்றம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 17 போ் சபரி மலைக்கு செல்ல ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனா். மேட்டூா் அனல் மின் நிலயம் எதிரே வந்த போது, ஓட்டுநா் வெங்கடேசன் (38), தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தாறுமாறாக ஓடிய வேன் சாலை தடுப்பில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் வடிவேல், ஜோதி, வீராகவன், மல்லையா உள்பட 17 போ் காயமடைந்தனா். இவா்கள் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். 4 போ் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.