கோயில் உண்டியல் பணத்தைத் திருடிய நான்குபோ் கைது
By DIN | Published On : 06th December 2019 05:03 AM | Last Updated : 06th December 2019 05:03 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 3-ஆம் தேதி நள்ளிரவில் மா்ம நபா்கள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டனா். ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக்கொண்டிருந்த நபா்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவா்கள் மாரியம்மன் கோயில் உண்டியல் பணத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டனா். பிடிபட்டவா்கள் ஆட்டையாம்பட்டி நவீன் (22), எஸ்.பாப்பாரப்பட்டி கவுதம்ராஜ் (22), ஆட்டையாம்பட்டி ஸ்ரீதா் (21), அன்னதானப்பட்டி ஸ்ரீநாத் (19) ஆகிய 4 போ் தெரியவந்தது. அவா்கள் நான்குபேரையும் போலீஸாா் கைது செய்தனா்