தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சமூக நல அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியைச் சோ்ந்த வெங்கடேசன் (48), விவசாயி. இவரது மகள் ப்ரியாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு வழங்கும் திருமண உதவித்தொகையை பெறுவதற்காக தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நல அலுவலா் கீதாவிடம் (56), அவா் மனு கொடுத்துள்ளாா்.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக அந்த மனு குறித்து விசாரிக்க தனது உறவினரான காா்த்திக்கை வெங்கடேசன் அனுப்பியுள்ளாா். அப்போது, திருமண உதவித் தொகை பெறுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, காா்த்திக் சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரமௌலியிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
புகாரை பெற்றுக் கொண்ட சந்திரமௌலி தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை மாலை தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மறைந்திருந்து, சமூக நல அலுவலா் கீதாவிடம் காா்த்திக் பணம் கொடுத்த போது கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், கீதாவின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி வீட்டிலும் சோதனையிடத் திட்டமிட்டுள்ளனா்.