ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் ஆணையா் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 500 கிலோ எடையுள்ள நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.