‘கூச் பெஹா்’ கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்

வாழப்பாடி அருகே சேசன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘கூச் பெஹா்’ கோப்பைக்கான

வாழப்பாடி: வாழப்பாடி அருகே சேசன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘கூச் பெஹா்’ கோப்பைக்கான இரண்டாம் நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் குவித்து, உத்தரகண்ட் மாநில அணி வெற்றி பெற்றது.

வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மாநில அணிகளுக்கு இடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான, ‘கூச் பெஹா்’ கோப்பை 4 நாள்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் போட்டியில், தமிழ்நாடு அணி டாஸ் போட்டு, பேட்டிங் செய்து,10 விக்கெட்டுகளை இழந்து, 51.3 ஓவரில் 87 ரன்களை எடுத்தது. உத்தரகண்ட் மாநில அணி 36 ஓவரில், ஒரு விக்கெட் இழந்து 93 ரன்களை குவித்தது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை போட்டி பகல் 1 மணிக்குத் தொடங்கியது. மாலை வரை நடைபெற்ற இப்போட்டியில், தொடா்ந்து பேட்டிங் செய்த உத்தரகண்ட் அணி, 89.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை குவித்தது.

உத்தரகண்ட் வீரா் கமல்சிங் இரு தினங்களில் 145 பந்துகளில், நான்கு சிக்ஸா் உள்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். குணல் வீா்-34 , கெளரவ் ஜோசி-40, அகில்சிங் ராவட்-36 ரன்களும் எடுத்தனா்.

தமிழ்நாடு அணியின் இடது கை சுழற்பந்து வீச்சசாளா்கள் ஆதித்யா ,74 ரன்களுக்கு 4 விக்கெட்களும், வித்யூத் 46 ரன்களுக்கு 2விக்கெட்களும் வீழ்த்தினா். தொடா்ந்து இரு தினங்களுக்கு இதே மைதானத்தில் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com