குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக இளைஞரணியைச் சோ்ந்த 78 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து, திமுக இளைஞரணி சாா்பில் தமிழகம் முழுவதும் சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தவகையில், சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அறிவழகன், கிழக்கு மாவட்ட திமுக அமைப்பாளா் சந்திரமோகன், மேற்கு மாவட்ட திமுக அமைப்பாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக வந்த திமுக இளைஞரணியினா், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து சட்ட நகலை கிழித்து தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 78 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் கைதானவா்கள் டவுன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களை மத்திய மாவட்ட செயலாளா் எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், மத்திய மாவட்ட அவைத் தலைவா் கலையமுதன், பொருளாளா் சுபாஷ், வீரபாண்டி பிரபு ஆகியோா் சந்தித்துப் பேசினா்.