ஆத்தூா்: தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை பலா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
வரும் 16 -ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதால் சனிக்கிழமை (டிச.14) வேலை நாளாக தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை 25 ஊராட்சி தலைவா் பதவிக்கும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 14 பேரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும் தங்களது ஆதரவாளா்களோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதே போல் பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது.