சேலம் மாநகராட்சி பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக பிப்ரவரி 12, 13 ஆகிய இரு நாள்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக பிப்ரவரி 12, 13 ஆகிய இரு நாள்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
 சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் தொட்டில்பட்டியில் பிப். 12-ஆம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
 இதனால் வரும் பிப்.13-ஆம் தேதி மாநகராட்சியின் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் 2 நாள்கள் மட்டும் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com