ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா வருகிற பிப். 25-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா, தம்மம்பட்டி தண்ணீர்பந்தல் அருகே தனி நபர்களுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் பங்கேற்றனர். பூமி பூஜையைத் தொடர்ந்து அந்த இடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.