பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம்  பகுதியில் புதன்கிழமை பெண்ணிடமிருந்து  அடையாளம் தெரியாத இருவர் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம்  பகுதியில் புதன்கிழமை பெண்ணிடமிருந்து  அடையாளம் தெரியாத இருவர் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
மகுடஞ்சாவடி அருகே கரட்டூர் மாரியம்மன் கோயில்  பகுதியைச் சேர்ந்தவர்  கோபால் மனைவி ஜெயந்தி (61). இவர் வீட்டு வெளியே புதன்கிழமை தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் பெண்ணை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்தனர். அதில் 6 பவுன் செயினை அந் நபர்கள்
பறித்துச் சென்றனர். 
இது குறித்து ஜெயந்தி, மகுடஞ்சாவடி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com