ஆத்தூரில் குடிநீரில் சாக்கடை  நீர் கலப்பு

ஆத்தூரில் தெருக்குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட  குடிநீரில் சாக்கடை நீர் கலந்திருந்ததால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்தூரில் தெருக்குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட  குடிநீரில் சாக்கடை நீர் கலந்திருந்ததால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் நகராட்சி மூலம் வெள்ளிக்கிழமை மாலை  தெருக் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட  குடிநீரில்  சாக்கடைநீரும் கலந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் 
 அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் குடிநீரை வீடுகளுக்கு எடுத்துச் செல்லாமல் கீழே கொட்டிவிட்டுச் சென்றனர். 
மேலும்,  குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது குறித்து ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில்  பொதுமக்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து  நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாக்கடை நீர் கலந்தது குறித்து விசாரித்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com