சாலை விபத்தில்  காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

எடப்பாடி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.

எடப்பாடி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.
எடப்பாடி அடுத்த எல்லமடை பகுதியைச் சேர்ந்தவர் மதி  (45). இவர் வெள்ளரிவெள்ளிப் பகுதியில்  சலூன்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை  மாலை மதி தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். 
அவர் சென்ற இருசக்கர வாகனம் வேட்டுப்பட்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மதி  எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  
இதையடுத்து  தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மதிக்கு சந்திரா (42)  என்ற மனைவியும்,  கவிப் பிரியா என்ற மகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com