பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர்மலை, அரசுப் பள்ளியில் திருப்பூர் குமரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.ஆசிரியர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் ஜோசப் ராஜ், திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.