திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுக்கடைகள் மூடல்

திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன.

திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவின்படி திருவள்ளுவர் தினம் (ஜன.16)  மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை (ஜன.21) முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
எனவே,  திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல். 3, எப்.எல். 3ஏ மற்றும் எப்.எல். 3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். 
மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com