சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ஜனவரி 16-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கும் அரசு விழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் கட்சி கூட்டங்களில் பங்கேற்க ஜனவரி 13-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வருகிறார். இதையடுத்து, ஜனவரி 16-ஆம் தேதி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் மேம்பாலம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடக்கி வைத்தும் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் முதல்வர் வருகை தர உள்ளார்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மகுடஞ்சாவடியில் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ், சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.