ஆத்தூரை அடுத்த தளவாய்ப்பட்டியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தினரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தளவாய்ப்பட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் வகுப்பு மாணவி ராஜலட்சுமியை அவரது எதிர்வீட்டுக்காரர் சுகுமார் என்பவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து ராஜலட்சுமியின் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பர், மாவட்டச் செயலாளர் சதீசுபாபு, மாவட்டத் தலைவர் காசிராவணன்,தொகுதி செயலாளர் செந்தில்குமார், தொகுதி தலைவர் வெற்றிக் கொண்டான், துணைத் தலைவர் மனோகரன், நகரச் செயலாளர் தணிகை ராஜன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.