மது அருந்தும் போது தகராறு: ஒருவர் வெட்டிக் கொலை

மேட்டூர் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேட்டூர் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேட்டூர் லிகரட்டை சேர்ந்தவர் சின்னுசாமி மகன் ஜெகதீஸ்குமார் (33). இவர் தனது நண்பர்களுடன் புதன்கிழமை ஏலிகரட்டில் உள்ள மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது, பொன்நகரை சேர்ந்த கார்த்திக், சரத்குமார், தமிழரசன் அருகில் மது அருந்திகொண்டிருந்தனராம். அப்போது, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட  வாக்குவாதத்தில் சரத்குமார் தரப்பினர் ஜெகதீஸ்குமாரை விரட்டிச்சென்று வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரத்குமார், கார்த்திக், தமிழரசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com