மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்தேவை குறைந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13-ஆம் தேதி காலை நொடிக்கு 11 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 86 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 35.78 டி.எம்.சி.யாக இருந்தது.