மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் முதலாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும்.
முதல் பிரிவில் நான்காவது அலகு பராமரிப்புப் பணிகளுக்காக ஏற்கெனவே நிறுத்தப்பட்டதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. வியாழக்கிழமை மின்தேவை குறைந்ததாக கூறி முதலாவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மேட்டூர் அனல் மின் நிலையப் பொறியாளர் தெரிவித்தார்.