மேட்டூர் அருகே வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மேட்டூர் மாதையன்குட்டையைச் சேர்ந்தவர் மாதேஷ் (50), கட்டடத் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை தனது மனைவி ஈஸ்வரி (45), மகள் தனலட்சுமி (22) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குருவரெட்டியூருக்கு சென்றார். செக்கானூர் அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாதேஷும், அவரது மகள் தனலட்சுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஈஸ்வரி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.