ஓய்வுபெற்ற பெண் வங்கி அலுவலர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

சேலத்தில் ஓய்வுபெற்ற பெண் வங்கி அலுவலர் வீட்டில் 15 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.


சேலத்தில் ஓய்வுபெற்ற பெண் வங்கி அலுவலர் வீட்டில் 15 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (65). இவர் எல்.ஐ.சி-யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேபி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனக் கூறப்படுகிறது. இத் தம்பதியினர் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றனர். பின்னர், கடந்த 14-ஆம் தேதி வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 15 பவுன் நகைகளைத் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து 
கன்னங்குறிச்சி போலீஸில் சோமசுந்தரம் புகார் செய்ததின்பேரில் வீட்டு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com