மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரியில் முடிவு:பாரிவேந்தர்

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் என பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.


மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் என பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் பாரிவேந்தர் தலைமையில் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவராக ஆர். சத்தியநாதன், செயலாளராக எஸ்.எஸ். வெங்கடேசன், பொருளாளராக டிஎஸ்பி. ராஜ் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாரிவேந்தர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பார்க்கவ குல முன்னேற்றச் சங்க மாநில பொதுக் குழு மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்களிடம் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது, எந்தந்த தொகுதியில் நிற்பது உள்ளிட்ட நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில், அவர்களுடைய முடிவு எடுக்கப்பட்டதும், பிப்ரவரி மாதத்தில் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி தெரிவிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 648 பேருக்கு ரூ. 48 கோடி அளவில் கல்வி கட்டண சலுகை வழங்கிய பாரிவேந்தருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com