திருட்டுப்போன ஆட்டோ ஒரே நாளில் மீட்பு

அயோத்தியாப்பட்டணம் அருகே திருட்டுப்போன ஆட்டோவை ஒரே நாளில் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவை திருடிச் சென்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தியாப்பட்டணம் மலையன் நகர் பகுதியைச் சேர

அயோத்தியாப்பட்டணம் அருகே திருட்டுப்போன ஆட்டோவை ஒரே நாளில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆட்டோவை திருடிச் சென்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம் மலையன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் மகன் செல்வக்குமார். கடந்த 19ஆம் தேதி அதிகாலை வீட்டுக்கு  அருகே நிறுத்தி வைத்திருந்த இவருக்குச் சொந்தமான ஆட்டோவை, மர்மநபர் திருடிச்சென்று விட்டதாக, காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் மற்றும் போலீஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு, ஆட்டோவை திருடிச்சென்ற வால்கரடு மஞ்சினி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் விக்னேஷ் என்பவரை மடக்கிப் பிடித்து, 20-ஆம் தேதி  ஆத்துôர் அருகே கைது செய்து செய்தனர். அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று, அண்மையில் உரிமையாளர் செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
திருட்டுப்போன ஒரே நாளில் ஆட்டோவை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்த காவல் உதவியாளர் தாமரைச்செல்வன் மற்றும் காரிப்பட்டி போலீஸாருக்கு  காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com