மேட்டூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்து 13.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மேட்டூர் அருகே காவேரி கிராஷ் ஏடிசி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (45). லாரி கூடுகட்டும் தொழில் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தார்.
திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் விழிப்பு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ இருந்த அறையின் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த 13.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து மதிவாணன் மேட்டூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.