கெங்கவல்லியில் கோயிலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் பிரதான சாலையோரம் அக்கறை மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்குகள், வெள்ளிப் பொருள்களை கடந்த ஜூன் 25 -ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், குற்றாவாளிகள் தெரிந்தும் போலீஸார் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கெங்கவல்லி போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் திருட்டு சம்பவம் நடைபெற்று 17 நாள்களுக்குப் பிறகு கெங்கவல்லியைச் சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ்(37), அவரது நண்பர் கலியன் மகன் வெங்கடாசலம் (36) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை மாலை போலீஸார் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.