மக்கள் நீதிமன்றத்தில் 1,832 வழக்குகளில் ரூ.16 கோடிக்கு சமரச தீர்வு

சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,832 வழக்குகளில் ரூ.16 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.


சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,832 வழக்குகளில் ரூ.16 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சேலம்  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சேலம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல், மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி குணவதி,  முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி ஆபிரகாம்லிங்கன் ஆகியோர்  பங்கேற்றனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டம் முழுவதும் 13,889 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,832 வழக்குகளில் ரூ.16 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com