காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 248 கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து, சனிக்கிழமை காலை நொடிக்கு 202 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளிக்கிழமை காலை 41.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 41.61 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 12.93 டி.எம்.சி.யாக இருந்தது.