இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   இ

கோயில்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலத்தில்  ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  இந்து முன்னணி அமைப்பின் கோட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார்.  இதில் இந்து கோயில்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இந்து அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு,  ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com