ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 24th July 2019 09:51 AM | Last Updated : 24th July 2019 09:51 AM | அ+அ அ- |

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக உள்ள சுப்பிரமணியன், கடந்த மே 31-ஆம் தேதி ஓய்வுபெறும் நாளன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையினர் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இசேபோல், ஆட்டையாம்பட்டியில் வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்கள், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சிப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.