தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஒரு மாவட்டத்தின் மேலாளர் மற்றொரு மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும், மாதாந்திர கையூட்டு, இடமாறுதல், கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது, குறைகள் மற்றும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாவட்ட மேலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.