சேலம் சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனையில் 32 வயது இளைஞருக்கு இரண்டு இடுப்பு மூட்டுகளுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனையின் தலைமை எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ.செந்தில்ராஜன் கூறியது:
முடக்குவாதம் என்று சொல்லப்படுகின்ற (Ankylosing Spondylitis) மூட்டு நோய் 15 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயது ஆண்களை அதிகம் பாதிக்கிறது. இந் நோய் பொதுவாக முதுகெலும்பு
(நல்ண்ய்ங்), முதுகெலும்பு இடுப்பு மூட்டுடன் இணையும் பகுதி (sacro- iliac joint) ஆகியவற்றை அதிகம் பாதிக்கும்.
பாதிப்புக்குள்ளான எலும்பு மூட்டுகள் மிக விரைவில் ஒன்றோடு ஒன்று இணைந்து முதுகெலும்பு மற்றும் இடுப்பு மூட்டுகளின் அசைவுகள் வெகுவாக குறைந்து விடுவதால், குனிந்து நிமிரமுடியாமலும் எழுந்து நடக்க முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சைகள் என்று பார்த்தால் நோயின் ஆரம்பக்கட்டங்களில் உடற்பயிற்சி
( Physiotheraphy) மற்றும் மருந்துகள் மூலமாக நோயின் வீரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை மட்டுமே பலனளிக்கிறது. தேய்ந்து போன இடுப்பு மூட்டுகளை அதி நவீன (செரமிக்கால் ஆன) செயற்கை இடுப்பு மூட்டுகளைக் கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இந் நோயினால் பாதிக்கப்பட்ட இடுப்பு மூட்டுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். செயற்கை மூட்டும் நீண்ட நாள்களுக்கு உறுதியாக
இருக்கும்.
சேலம் காவேரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன உபகரணங்களைக் கொண்டு எளிதில் சுலபமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், காவேரி மருத்துவமனையில் 32 வயது இளைஞருக்கு இரண்டு இடுப்பு மூட்டுகளுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார் என்றார் அவர்.