வாக்காளர்களுக்கு நாமக்கல் எம்.பி. நன்றி தெரிவிப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில்

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வாக்காளர்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார். சங்ககிரி ஒன்றியத்தில் 68  பகுதிகளில் வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியது:
தேர்தலில் நான் கூறியதுபோல் எனது மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கான ஊதியத்தை தொகுதி மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடுவேன். உங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்னை, சாலை வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் தனிதனியாக என்னிடம் மனுக்களாக அளித்தால் அம்மனுக்கள் மீது அலுவலர்களிடத்தில் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதாராஜன்,  சங்ககிரி திமுக ஒன்றியச் செயலர் (பொறுப்பு)  எம். ராஜேஷ் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com