தம்மம்பட்டியில் கொத்தமல்லி தழை வரத்து சரிந்ததால், விலை உயர்ந்துள்ளது.
தம்மம்பட்டி மற்றும் கொல்லிமலை, பச்சமலை பகுதிகளில் கடந்த 10 நாள்களில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி தழை வயலிலேயே அழுகி வீணாகியது.
மழைக்கு முன் ஆயிரம் கட்டுகள் வரத்து இருந்தன. தற்போது 280 கட்டுகள் மட்டுமே தம்மம்பட்டி காய்கறி மண்டிகளுக்கு வருகின்றன. ஒரு கொத்தமல்லி தழைக்கட்டு ரூ.10-க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனையாகிறது. அதேபோல், மழைக்கு முன் நாட்டுரக கொத்தமல்லி தழை ரூ.6-க்கு விற்றது, தற்போது ரூ.22-க்கு விற்பனையானது.