தீயணைப்புத் துறை சார்பில் எடப்பாடி பகுதியில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமுக்கு மாவட்ட தீத்தடுப்புக் குழு உதவித் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முகாமில் தீ விபத்தால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கும் வழிமுறைகள், எரிவாயு உருளைகள் மற்றும் அடுப்புகளை பாதுகாப்பாக கையாளுதல் உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கங்களை எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்த்தி காட்டினர்.
நிகழ்ச்சியில் எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயக்குமார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலைச்செல்வன், முனியப்பன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.