நூற்பாலை தீ விபத்தில் பெண் பலி

பெத்தநாயக்கன்பாளையம் தனியார் நூற்பாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் பலத்த காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெத்தநாயக்கன்பாளையம் தனியார் நூற்பாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் பலத்த காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஓலப்பாடி சாலையில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ்  மனைவி வெண்ணிலாவுக்கு (57), பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலையக் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com